/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் அடித்தல், திருத்தல் இருந்தாலும் ஏற்கப்படும் கலெக்டர் சரவணன் தகவல்
/
எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் அடித்தல், திருத்தல் இருந்தாலும் ஏற்கப்படும் கலெக்டர் சரவணன் தகவல்
எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் அடித்தல், திருத்தல் இருந்தாலும் ஏற்கப்படும் கலெக்டர் சரவணன் தகவல்
எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் அடித்தல், திருத்தல் இருந்தாலும் ஏற்கப்படும் கலெக்டர் சரவணன் தகவல்
ADDED : நவ 15, 2025 05:20 AM
திண்டுக்கல்: எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் அடித்தல், திருத்தல் இருந்தாலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என கலெக்டர் சரவணன் கூறினார்.
அவர் அளித்த பேட்டி : 7 சட்டசபை தொகுதிகளில் 19 லட்சத்து 34 ஆயிரத்து 447 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்படிவம் 93 சதவீதம் வழங்கப் பட்டுள்ளது.
கொடைக்கானல், மலை கிராமங்கள், நகர் பகுதிகளில் 85 சதவீத படிவங்கள் வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப வாங்கும் பணி நவ.15 (இன்று) முதல் நடக்கிறது.
எஸ்.ஐ.ஆர்., படிவம் பூர்த்தி செய்வது தொடர்பான சந்தேகங்கள், படிவம் நிரப்புதல் தொடர்பான சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 124 பூத்களிலும் நவ.15 (இன்று), நவ.16 (நாளை) 2 நாட்கள் நடக்கிறது.
இங்கு ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், தன்னார்வலர்கள் மூலம் வாக்காளர்களின் படிவங்களை பூர்த்தி செய்யவும், சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கவும், பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்ப பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஐ.ஆர்., படிவத்தில் அடித்தல், திருத்தல் இருந்தாலும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். படிவம் பூர்த்தி செய்வது தொடர்பாக வாக்காளர்கள் அச்சப்பட வேண்டாம்.
சந்தேகங்கள், படிவம் நிரப்புதலுக்காகவே சிறப்பு முகாம் நடக்கிறது. தேவையின் அடிப்படையில், கூடுதல் முகாம்கள் நடத்த திட்டமிடப்படும்' என்றார்.

