ADDED : அக் 01, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் ஸ்ரீசாய்பாரத் கல்லுாரி மாணவர்கள் சார்பில் துாய்மையே சேவை திட்டத்தின் கீழ் நாட்டு நலப்பணி திட்ட முகம் வேடசந்துார் அரசு மருத்துவமனையில் நடந்தது. கல்லுாரி நிர்வாக அலுவலர் ஸ்டாலின் தலைமை வகித்தார்.
அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் லோகநாதன் துவக்கி வைத்தார். மருத்துவமனையின் அனைத்து பகுதிகளையும் கல்லுாரி மாணவர்கள் துாய்மைப்படுத்தினர். கல்லுாரி முதல்வர் ஜான் வின்சென்ட், துணை முதல்வர் சிவரஞ்சனி, நாட்டு நலப்பணித் திட்ட பொறுப்பாளர்கள் புவனேஷ், அசாருதீன் பங்கேற்றனர்.