ADDED : பிப் 03, 2025 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது. ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். கிரிவீதியில் வாகனங்கள் அனுமதி இல்லாததால், பேட்டரி கார் , பஸ் மூலம் இலவசமாக பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.