/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மகள் மர்ம மரணம் தந்தையும் தற்கொலை
/
மகள் மர்ம மரணம் தந்தையும் தற்கொலை
ADDED : ஆக 11, 2025 02:30 AM
பழனி,:மகள் மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்த நிலையில், தந்தையும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டம், பழனி ஆயக்குடி, ராஜபுரம்புதுாரை சேர்ந்த பழனியப்பன், 53. இவரது மனைவி விஜயா, 47. மகன் நல்லசாமி, 25, மகள்கள் கார்த்திகா, 27, தனலட்சுமி, 23. தனலட்சுமி உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
விஜயா, கார்த்திகா திருச்செந்துார் கோவிலுக்கு நேற்று முன்தினம் சென்றனர். பழனியப்பன் வீட்டிற்கு அக்கம் பக்கத்தினர் நேற்று காலை சென்றபோது, அவர் துாக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். ஆயக்குடி போலீசார், வீட்டிற்கு சென்று பார்த்தபோது, தனலட்சுமி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவருக்கு இறப்பு சடங்குகள் செய்ததற்கான அடையாளங்கள் இருந்தன. மகளை கொலை செய்து, சடங்குகள் செய்த பின் தந்தை துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா, மகள் உடல்நலக் குறைவால் இறந்ததால் தந்தை தற்கொலை செய்தாரா என, போலீசார் விசாரிக்கின்றனர்.