ADDED : மார் 13, 2026 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: கோவில்பட்டி மேலத்தெரு பகவதி அம்மன் கோயில் கொம்பன் காளை உடல்நலக்குறைவால் இறந்தது. இதை கோயில் முன்பு வைக்கப்பட்டு மாலைகள் அணிவித்து சந்தனம், ஜவ்வாது, வேட்டி, துண்டுகள் அணிவித்து கண்ணீர் மல்க அப்பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த காளை அலங்காநல்லுார், பாலமேடு, கொசவபட்டி, அய்யாபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஜல்லிகட்டுகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசு , சில்வர், பித்தளை, சைக்கிள் போன்ற பல்வேறு பரிசு பொருட்களை பெற்றுள்ளது. கோயிலின் அருகிலே மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

