sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழனியில் கிரி வீதி ஆக்கிரமிப்புக்கு கிடைத்த தீர்வால் பக்தர்கள் நிம்மதி

/

பழனியில் கிரி வீதி ஆக்கிரமிப்புக்கு கிடைத்த தீர்வால் பக்தர்கள் நிம்மதி

பழனியில் கிரி வீதி ஆக்கிரமிப்புக்கு கிடைத்த தீர்வால் பக்தர்கள் நிம்மதி

பழனியில் கிரி வீதி ஆக்கிரமிப்புக்கு கிடைத்த தீர்வால் பக்தர்கள் நிம்மதி


ADDED : மார் 08, 2024 09:28 PM

Google News

ADDED : மார் 08, 2024 09:28 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி:திண்டுக்கல் மாவட்டம், பழனி முருகன் கோவில் அடிவாரம் கிரி வீதியில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வாகன போக்குவரத்துக்கும் தடை செய்யப்பட்டதால் வெறிச்சோடி காணப்பட்டது.

எனினும், பக்தர்கள் நிம்மதி அடைந்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் இலவச பஸ் சேவையும் துவங்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் நெருக்கடியின்றி கோவிலுக்கு சென்று வந்தனர்.

பழனி அடிவாரம் கிரிவீதியில் ஆக்கிரமிப்புகளை தடுக்க, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை பல வழிகாட்டுதல்களை வழங்கியது.

அதன்படி, கிரி வீதியை சென்றடையும் கொடைக்கானல் பைபாஸ் இணைப்பு சாலை, அய்யம்புள்ளி ரோடு, சன்னிதி வீதி, இட்டேரி ரோடு, பூங்கா ரோடு, கிழக்கு கிரி வீதி இலவச சுற்றுலா வாகன நிறுத்த இணைப்பு சாலைகள், கோசாலை சுற்றுலா வாகன நிறுத்த இணைப்பு சாலைகள் அடைக்கப்பட்டன.

அந்த பகுதியில் வாகன போக்குவரத்துக்கும் தடை ஏற்படுத்தி, பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், இலவச பஸ் சேவை துவங்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட நெரிசலின்றி, வீதிகள் வெறிச்சோடி இருப்பதால் பக்தர்களும் சிரமம் இன்றி கோவிலுக்கு சென்று வருகின்றனர்.






      Dinamalar
      Follow us