ADDED : ஆக 11, 2011 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் விவேகானந்த நகரை சேர்ந்தவர் ரேணுகாதேவி (24).
இவருக்கும் கோம்பையன்பட்டியை சேர்ந்த ராஜமணி (29) க்கும் இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 40 பவுன் நகை, நான்கு லட்ச ரூபாய் சீர் வரிசை செய்தனர். மேலும் ஒரு லட்சம் கேட்டு ரேணுகாதேவியை, கணவர், சகோதரர் நல்லமணி (31), தந்தை ரத்தினம் (50), தாய் பாப்பாத்தி (40) மிரட்டினர். புகாரின்படி, மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

