ADDED : செப் 28, 2025 03:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு: வேடசந்துார் சட்டசபை தொகுதி தி.மு.க., தேர்தல் முகவர்கள் கூட்டம் எரியோட்டில் நடந்தது. மண்டல பொறுப்பாளரான அமைச்சர் சக்கரபாணி தலைமை வகித்தார். காந்திராஜன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
முகவர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து 3 தொகுதிகளின் பொறுப்பாளரான திருச்சி சிவா எம்.பி., ஆலோசனை வழங்கினார். மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, தொகுதி பொறுப்பாளர் வீரமணி, ஒன்றிய செயலாளர்கள் வீரா சாமிநாதன், கவிதா, சுப்பையன், பாண்டி, சீனிவாசன், சசிராஜலிங்கம், நகர தலைவர் கார்த்திகேயன், செந்தில்குமார், கணேசன், கருப்பன், கதிரவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமிகார்த்திகேயன் பங்கேற்றனர்.