/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
த.வெ.க.,வில் ஊடுருவிய தி.மு.க.,வினர் எல்.ஜெ.கே., தலைவர் பேட்டி
/
த.வெ.க.,வில் ஊடுருவிய தி.மு.க.,வினர் எல்.ஜெ.கே., தலைவர் பேட்டி
த.வெ.க.,வில் ஊடுருவிய தி.மு.க.,வினர் எல்.ஜெ.கே., தலைவர் பேட்டி
த.வெ.க.,வில் ஊடுருவிய தி.மு.க.,வினர் எல்.ஜெ.கே., தலைவர் பேட்டி
ADDED : மார் 23, 2026 06:36 AM
பழநி: ''த.வெ.க.,வில் தி.மு.க.,வினர் ஊடுருவி உள்ளனர்; தனித்து நிற்க வைத்து தோற்கடிப்பது தான் தி.மு.க.,வின் திட்டம்,'' என, லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
புதுச்சேரி மாநில தேர்தலில் தே.ஜ., கூட்டணியில் போட்டியிட உள்ள லட்சிய ஜனநாயகக் கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பழநி திருஆவினன்குடி கோயிலில் தன் வேட்பு மனுவை வைத்து தரிசனம் செய்து விளக்கேற்றி வழிபட்டார்.
பின் அவர் கூறியதாவது: புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தே.ஜ., கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சிக்கு வர வேண்டிய தேவையில்லை.
அதிகாரிகளின் செயல்பாட்டில் தான் அரசு இயங்குகிறது. தே.ஜ., கூட்டணி வெற்றி பெற அனைத்து தொகுதிகளிலும் செயல்பட உள்ளோம்.
த.வெ.க.வில் தி.மு.க.,வினர் ஊடுருவி உள்ளனர்; தனித்து நிற்க வைத்து தோற்கடிப்பது தான் தி.மு.க.,வின் திட்டம் என்றார்.

