ADDED : செப் 04, 2025 04:38 AM
அ நிறம் | அளவு
நத்தம்: நத்தம் கோவில்பட்டி பாமாருக்குமணி சமேத வேணுராஜகோபாலசுவாமி கோயிலில் ஆவணி ஏகாதசி பூஜை விழா நடந்தது.
இதையொட்டி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய பால், பழம், பன்னீர், புஷ்பம், விபூதி உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
