ADDED : மார் 19, 2026 05:05 AM

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டு பேரூராட்சி சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி நடந்தது.பேரூராட்சி அலுவலக வளாகத்தில் நடந்த இதில் தேர்தல் திருவிழா, தேசத்தின் திருவிழா, 100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்வோம்.
வாக்களிப்பது நமது உரிமை என கோலங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.பேரூராட்சி செயல் அலுவலர் ஆஷா ராணி, ஆர்.ஐ., ராஜசேகரன், வி.ஏ.ஓ., சரண்யா பங்கேற்றனர்.
பழநி: நகராட்சி ,மகளிர் மேம்பாட்டு திட்டம் சார்பாக பழநி பஸ் ஸ்டாண்டில் உள்ள கட்டடத்தில் தேர்தலில் ஓட்டளிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நடைமேடையில் தேர்தல் விழிப்புணர்வு குறித்து வண்ண கோலமிட்டனர். நகராட்சி கமிஷனர் டிட்டோ, தாசில்தார் நவநீதகிருஷ்ணன், துணை தாசில்தார் மைதிலி கலந்து கொண்டனர்.
வேடசந்துார்: ஒன்றிய அலுவலகத்தில் ரங்கோலி கோலப்போட்டி தொகுதி தேர்தல் உதவி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் நடந்தது.
சுய உதவி குழு பெண்கள் தேர்தல் குறித்த விழிப்புணர்வாக ரங்கோலி கோலமிட்டனர். வருவாய் ஆய்வாளர் பாரதி, மகளிர் திட்ட வட்டார அலுவலர் ஜெயசித்ரா, வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன் பங்கேற்றனர்.
திண்டுக்கல்: கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் தேர்தல் விழிப்புணர்வு ரங்கோலி கோலம் வரையப்பட்டது. சிறந்த ரங்கோலிக்கு பரிசு வழங்கப்பட்டது.

