நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்,: திண்டுக்கல்லில் தமிழர் சமூகநீதிக் கழக மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் ஜோசப் தலைமை வகித்தார். தலைவர் தங்கபாண்டியன், தலைவர் முருகன்,பொருளாளர் மலையாளராஜா,மகளிரணி தலைவர் சுமதி முன்னிலை வகித்தனர். அருந்ததியர் சமூகத்திற்கு கருணாநிதி வழங்கிய 3 சதவீத உள் இட ஒதுக்கீட்டை பாதுகாக்க தமிழ்நாடு அருந்ததியர் கூட்டமைப்பு சார்பில் டிச.23 சென்னையில் நடக்கும் உள் இட ஒதுக்கீடு ஊர்வலத்தில் திரளாக பங்கேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நகர செயலாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.