ADDED : அக் 03, 2025 01:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எரியோடு; எரியோடு சித்துார் அடுத்த தண்ணீர்பந்தம்பட்டியில் செயல்படும் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் மரத்துாள், நிலக்கடலை, புளி ஓடுகள் உள்ளிட்ட பல்வேறு தாவர கழிவுகளை மொத்தம் சேர்த்து செங்கல் போன்ற கேக்குகளாக மாற்றும் பணி நடக்கிறது.
இவை தொழிற்சாலை பாய்லர்களில் எரிபொருளாக பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் இதற்கான மூலப்பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த பகுதியில் நேற்று தீப்பற்றி எரிந்தது.
திண்டுக்கல், வேடசந்துார் நிலையங்களில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் முயற்சித்து தீயை அணைத்தனர்.