/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உணவுத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
/
உணவுத்துறை முதன்மை செயலாளர் ஆய்வு
ADDED : அக் 14, 2024 08:20 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநியில் கூட்டுறவு நுகர்பொருள், உணவுத்துறை முதன்மை செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்டு செய்தார். பழநி முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்த பின் நுகர்வோர் வாணிப கழக கோடவுனில் உள்ள பொருட்களின் அவற்றின் தரத்தை ஆய்வு செய்து அவர் கூறியதாவது:
மழைக்காலம் துவங்கியதால் ரேஷன் கடைகளில் தட்டுப்பாடு இன்றி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பொருட்களை பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் புனரமைப்பு பணி நடக்கிறது. 37 ஆயிரம் கடைகளில் 6000 கடைகள் புதிதாக கட்டடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.