sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

மின் கம்பத்தில் வைக்கப்படும் விளம்பர பலகையால் விபத்து

/

மின் கம்பத்தில் வைக்கப்படும் விளம்பர பலகையால் விபத்து

மின் கம்பத்தில் வைக்கப்படும் விளம்பர பலகையால் விபத்து

மின் கம்பத்தில் வைக்கப்படும் விளம்பர பலகையால் விபத்து


ADDED : ஜன 02, 2026 06:06 AM

Google News

ADDED : ஜன 02, 2026 06:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆணியால் பாழாகும் மரங்கள்

திண்டுக்கல்- நத்தம் ரோடு பொன்னகரத்தில் மரத்தில் ஆணி அடித்து விளம்பரப் பலகைகளை தொங்க விடுகின்றனர் . மரத்தில் ஆங்காங்கே ஆணிகளால் அடிப்பதால் மரம் பட்டு போக வாய்ப்புள்ளதால் இதை தடுக்க வேண்டும். அமுதா, திண்டுக்கல்.

...................---------பராமரிப்பற்ற பூங்கா

அய்யம்பாளையம் கே.பி. டி. நகர் பூங்காவில் பராமரிப்பு இல்லாமல் செடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது .இதில் குழந்தைகள் விளையாடுகின்றனர் .விஷ பூச்சிகள் அதிக அளவில் உள்ளதால் இதை அகற்ற வேண்டும்.மகேஸ்வரி, அய்யம்பாளையம்............--------மின்கம்பத்தில் பலகை

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகே தாடிக்கொம்பு ரோட்டில் மின்கம்பத்தில் ஆபத்து என தெரிந்தும் விளம்பர பலகைகளை அமைத்துள்ளனர். இதனை அகற்ற துறை அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.சரவணகுமார், திண்டுக்கல்.

..........--------குப்பையை குவித்து தீ

ஆத்துார் கலிக்கம்பட்டி ஊராட்சி கலைமகள் காலனி அருகே மயானத்தில் கழிவுகளை குவித்து எரியூட்டுவதால் சுகாதாரக்கேடு தாராளமாகி விட்டது.இதன் காரணமாக பலரும் நோய் தொற்றுக்கும் ஆளாகின்றனர். -வி.ஜோதிமுத்து, கலிக்கம்பட்டி.

........--------தவறான வழிகாட்டுதல்

திண்டுக்கல் சிலுவத்துார் ரோட்டில் ரவுண்ட் ரோடு பிரிவு அருகில் உள்ள பேரி கார்டில் செல்லும் திசையை மாற்றி வைத்துள்ளதால் திருச்சி செல்வோருக்கு தவறான வழிகாட்டுதலாக உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும். --நாகேந்திரன், செங்குறிச்சி...........--------கழிவுநீர் தேக்கத்தால் நோய்

சாணார்பட்டி வேம்பார்பட்டி அரசு தொடக்கப்பள்ளி செல்லும் ரோட்டில் சாக்கடை இல்லாததால் சாலையில் கழிவுநீர் தேங்கி உள்ளது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. பிச்சால், வேம்பார்பட்டி.

..............--------ரேஷன் கடை கூரை சேதம்

கல்வார்பட்டி ஊராட்சி ரங்கநாதபுரம் ரேஷன் கடையின் கூரை சேதம் அடைந்துள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் கட்டடத்தை புதுப்பித்து தருவதோடு புதிய கட்டடம் கட்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பி.தண்டபாணி, ரங்கநாதபுரம்........--------






      Dinamalar
      Follow us