ADDED : நவ 15, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் வனச்சரகத்திற்குட்பட்ட துவராபதி கிராம பகுதியில் கரந்தமலை பகுதியின் தொடர்ச்சியான திரணி மலை உள்ளது.
இந்த மலை பகுதியில் நேற்று இரவு திடீரென காட்டுத் தீ பற்றி மளமளவென கொழுந்து விட்டு எரிந்தது. வனத்துறையினர் பொதுமக்களுடன் இணைந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அப்பகுதியில் இருந்த செடி, கொடிகள் தீயில் கருகின. வெயிலின் தாக்கத்தால் தீ பற்றி எரிந்ததா, வேறு காரணமா என விசாரணை நடக்கிறது.

