/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போக்சோ வழக்கில் நால்வருக்கு சிறை
/
போக்சோ வழக்கில் நால்வருக்கு சிறை
ADDED : நவ 30, 2024 05:46 AM
திண்டுக்கல்; திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை, உதவியதாக இருந்தவர்கள் என நான்கு பேருக்கு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.
நத்தம் கோமணம்பட்டியை சேர்ந்தவர் அஜித்22. 2023ல் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து பாலியல் தொல்லை செய்தார். இதன்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. அஜித்திற்கு 13 ஆண்டுகள் சிறை ,ரூ.55,000 அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.அரசு தரப்பு வழக்கறிஞராக மைதிலி ஆஜரானார்.
இதேபோல் குஜிலியம்பாறை ஆலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டி19. இவர் 2022ல் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவருக்கு உதவியாக தந்தை சுப்பிரமணி62,தாய் காளியம்மாள்55, இருந்தனர். இதன்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. பாண்டிக்கு 25 ஆண்டுகள் சிறை ,ரூ.1.55 லட்சம் அபராதம்,சுப்பிரமணி,காளியம்மாள் தலா 22 ஆண்டு சிறை , ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார்.