/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
'கொடை' யில் இயந்திர பயன்பாடு தாராளம்: இயற்கைக்கு ஆபத்து
/
'கொடை' யில் இயந்திர பயன்பாடு தாராளம்: இயற்கைக்கு ஆபத்து
'கொடை' யில் இயந்திர பயன்பாடு தாராளம்: இயற்கைக்கு ஆபத்து
'கொடை' யில் இயந்திர பயன்பாடு தாராளம்: இயற்கைக்கு ஆபத்து
ADDED : நவ 20, 2025 05:47 AM

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் தடை செய்யப்பட்ட கனரக இயந்திர பயன்பாடு , பாறை தகர்ப்பு ஜோராக நடக்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான கொடைக்கானலில் மண் அள்ளும் இயந்திரம் , போர்வெல், பொக்லைன், கம்ப்ரசர் மூலம் பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு மலைத் தள பாதுகாப்பு விதிப்படி அப்போதைய கலெக்டர் வள்ளலார் தடை விதித்தார்.
இந்நடைமுறை தற்போது வரை தொடர்கிறது.இருந்த போதும் வருவாய்துறை, வனத்துறை ஆசியுடன் இத்தகைய செயல் இன்றும் நடக்கின்றன. மண்வளம், இயற்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் இயந்திர பயன்பாடால் இயற்கை பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கொடைக்கானல் ஆர்.டி.ஓ., சில மாதங்களுக்கு முன் எச்சரித்தார். மேலும் ஜூன் 30 க்குள் தடை செய்யப்பட்ட வாகனங்கள் மலைப்பகுதியை விட்டு இறங்க வேண்டும். மீறும் பட்சத்தில் ஜூலை 1 முதல் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தார். இருந்தப்போதும் இதன் பயன்பாடு இன்றளவும் தடையின்றி ஜோராக நடந்தது வருகிறது.
சில தினங்களுக்கு முன் பள்ளங்கி கோம்பையில் தனியார் இடத்தில் வெடி வைத்து பாறை தகர்த்தது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டு வாகனம் பறிமுதல், அபராதம் என பெயரளவிற்கு வருவாய்த்துறை கண்துடைப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இவ்வகை தடை வாகனங்கள் அனைத்தும் வில்பட்டி ஊராட்சியில் அடைக்கலமாக உள்ளது. பூம்பாறை பகுதியில் ஏராளமான இடங்களில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் மண் சீரமைத்தல், வெடி வைத்து பாறை தகர்ப்பு உள்ளிட்ட பணிகள் தனியார் இடத்தில் நடக்கின்றன.
தடை செய்யப்பட்ட இந்நிகழ்வு அனுமதியின்றி இரவு, பகலாக நடக்கிறது. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் மவுனம் காக்கின்றனர். திண்டுக்கல் கலெக்டர் சரவணன் இவ்விஷயத்தில் கண்டிப்பு காட்ட காட்ட வேண்டும்.

