ADDED : ஆக 30, 2025 04:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: மத்திய அரசு அறிவித்தப்படி, 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டச் செயலாளர் ராஜாமணி தலைமை வகித்து பேசினார்.
மாவட்ட தலைவர் முபாரக் அலி, செயலாளர் சுகந்தி விளக்கவுரையாற்றினர். பொருளாளர் மகாலிங்கம், வட்ட தலைவர் அர்ச்சுனன், மாவட்ட இணை செயலாளர் ஜெயபால் பங்கேற்றனர்.