sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குடிநீருடன் கலக்கும் கழிவுநீரால் தொற்று...

/

குடிநீருடன் கலக்கும் கழிவுநீரால் தொற்று...

குடிநீருடன் கலக்கும் கழிவுநீரால் தொற்று...

குடிநீருடன் கலக்கும் கழிவுநீரால் தொற்று...


ADDED : ஜன 20, 2025 05:49 AM

Google News

ADDED : ஜன 20, 2025 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெயர் பலகையால் தடுமாற்றம் : திண்டுக்கல் ஒடுக்கம் ரோடு அருகே பெயர் பலகை அழிந்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அழிந்துள்ள பலகையால் தெரு பெயர் தெரியாமல் சுற்றி செல்கின்றனர். பெயர் பலகையை புதுபிக்க வேண்டும்.

--ஜெகதீஷ், திண்டுக்கல்.

-----குடிநீருடன் கலக்கும் கழிவுநீர் : திண்டுக்கல் நத்தம் ரோடு நொச்சிஓடைப்பட்டி கிரீன் சிட்டி செல்லும் குடிநீர் குழாயும் சாக்கடை கழிவு நீரும் ஒன்றாக கலக்கிறது. இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. நோய் பரவும் அபாயம் உள்ளது.

-சிவக்குமார், நொச்சிஓடைப்பட்டி.-------

ரோடு பள்ளத்தால் விபத்து : வடமதுரை எரியோடு ரோட்டில் வெள்ளமடை பகுதியில் ரோட்டின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் டூவீலர்கள் சிக்கி விபத்துக்கள் ஏற்படுகின்றன. இப்பகுதியை சீரமைக்க நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை வேண்டும்.

---கணேசன், வடமதுரை.--------

பயன்பாடில்லாத தண்ணீர் தொட்டி : திண்டுக்கல் நல்லாம்பட்டியில் தண்ணீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. பயன்பாடு இன்றி உள்ளதால் மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர். சரி செய்து தண்ணீர் தொட்டியை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிச்சைமுத்து, நல்லாம்பட்டி.--------

தொற்று பரப்பும் கழிவுநீர் : ரெட்டியார்சத்திரம் முத்தலாம்பட்டி புதுார் ஆரம்ப பள்ளி அருகே கழிவு நீர் செல்ல வழி இல்லாமல் தேங்குகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் பாதிக்கின்றனர். தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-முத்துப்பாண்டி, திண்டுக்கல்.

--------

குப்பையால் உருவாகும் சீர்கேடு : திண்டுக்கல் மோர்பட்டி ஊராட்சி கொல்லப்பட்டியில் அரசு பள்ளி அருகில் துாய்மை பணியாளர்கள் குப்பையை அள்ளாமல் உள்ளனர். தொடர்ந்து பள்ளி அருகே தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.

-விஜயா, கொல்லப்பட்டி.---------

எரியாத உயர் கோபுர விளக்கு : பழநி - திண்டுக்கல் ரோட்டில் உள்ள உயர் கோபுர விளக்கு மூன்று மாதங்களாக எரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இரவு நேரங்களில் விபத்துக்கள் நடக்கிறது. உயர் கோபுர விளக்கு சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில்குமார், பழநி.---------






      Dinamalar
      Follow us