ADDED : மே 06, 2024 12:56 AM

அ நிறம் | அளவு
எம்.தர்ஷினி,மாணவி, திண்டுக்கல்: நான் நீட் தேர்வு எழுதியதன் மூலம் எனக்கு தன்னம்பிக்கை அதிகரித்துள்ளது.
என்னால் முடிந்த வரை, நல்ல முறையில் தேர்வு எழுதியுள்ளேன். சமச்சீர் பாடத்திட்டத்தில் பயின்ற எனக்கு தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. நீட் தேர்வு கட்டாயம் அவசியம் தேவை. சமச்சீர் பாடத்திட்டத்தில் பயின்றவர்கள் மனப்பாடம் செய்து தான் தேர்வு எழுதுவர் என்ற கருத்து நிலவுகிறது. அப்படியில்லை என்பதை நிரூபிக்க நீட் உதவுகிறது. இந்த தேர்வு மூலம் தான் மருத்துவ கனவு நனவாகும். இயற்பியல் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் சற்று கடினமாக இருந்தது.
