ADDED : அக் 26, 2025 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி: வி.மேட்டுப்பட்டி குலம் காக்கும் காளியம்மன் கோயிலில் மண்டல பூஜை நடந்தது.
இதையொட்டி கோயிலில் கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம், பஞ்சகவ்ய யாகம் உள்ளிட்ட யாகசாலை பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து அம்மனுக்கு பால், பழம், நெய், தேன்,பஞ்சகவ்யம் உள்ளிட்ட 21 வகை அபிஷேக பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம், தீபாராதனை பூஜைகள் நடந்தது.
அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

