/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி முருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு
/
பழநி முருகன் கோயிலில் கார்த்திகை வழிபாடு
ADDED : ஏப் 30, 2025 05:54 AM

பழநி; பழநி முருகன் கோயிலில் சித்திரை மாத கார்த்திகை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
மூலவருக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை ,ஆறு கால பூஜை நடைபெற்றது. உள்ளூர், வெளியூர், வெளி மாநில பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், வின்ச் மூலம் கோயில் சென்றனர். ரோப்கார், வின்ச்சில் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
குத்து விளக்கு பூஜை திருக்கல்யாணம் மண்டபத்தில் நடந்தது. சாயரட்சை பூஜைக்கு பின் தங்கமயில் வாகனத்தில் சின்ன குமாரசுவாமி புறப்பாடு நடந்தது. வெளி பிரகாரத்தில் தங்கரத புறப்பாட்டில் சின்னகுமாரசுவாமி எழுந்தருளினர். கார்த்திகை விரதம் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். திருஆவினன்குடி கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத கார்த்திகை யொட்டி முருக பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்ய 16 வகையான சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.சர்வ அலங்காரத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்தார். நத்தம்-கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் தண்டபாணி சன்னதி, குட்டூர் உண்ணாமுலை அம்பாள் கோயிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதிகளிலும் கார்த்திகையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
திண்டுக்கல்: அபிராமி அம்மன் கோயிலில் உள்ள வள்ளி-தெய்வானை, சண்முகர் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. திண்டுக்கல் ஆர்.வி.நகர் கந்தகோட்டம் முருகன் கோயில், என்.ஜி.ஓ. காலனி முருகன் கோயில், ஒய்.எம்.ஆர்., பட்டி முருகன் கோயில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கிருத்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.