/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விரிவுரையாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
/
விரிவுரையாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
ADDED : பிப் 15, 2026 05:37 AM
திண்டுக்கல்: தமிழ்நாடு கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் பல்கலை மானியக்குழு பரிந்துரைத்த ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் எம்.வி.எம்., அரசினர் மகளிர் கலை அறிவியல் கல்லுாரி நுழைவாயிலுக்கு முன் தொடர் போராட்டம் நடந்து வருகிறது.
திண்டுக்கல் கிளைத் தலைவர் விரிவுரையாளர் விஷ்ணுபிரியா தலைமை வகித்தார். இவர்களுக்கு மாவட்ட பா.ஜ., ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி மாநில தலைமைக்கு தெரிவிக்கப்படும் என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். தமிழ்துறை விரிவுரையாளர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
பா.ஜ., மாவட்டத் தலைவர் முத்துராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் போஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர், மாவட்டத் துணைத் தலைவர் சபாபதி, மாவட்டச் செயலாளர் கண்ணன், மாநகர் கிழக்கு மண்டல் தலைவர் ராமகண்ணன், சமூக ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவர் ஜோதிலிங்கம் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாலையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

