நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: நிலக்கோட்டை முசுவனுாத்து பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி அழகர்சாமி 23. இவர் 2023 மார்ச்சில் அதே பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவியை காதலிப்பதாக கூறி ஆந்திராவிற்கு கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தார்.
வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் அழகர்சாமிக்கு ஆயுள் தண்டனை, ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி வேல்முருகன் தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் மைதிலி ஆஜரானார்.