/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டேஜ் உரிமையாளர் கொலையில் மதுரை வாலிபர் கைது
/
காட்டேஜ் உரிமையாளர் கொலையில் மதுரை வாலிபர் கைது
ADDED : மார் 27, 2025 03:10 AM
கொடைக்கானல்:கொடைக்கானலில் காட்டேஜ் உரிமையாளர் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மதுரை தத்தனேரியை சேர்ந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
கொடைக்கானல் குருசரடி மெத்து பெரும்பள்ளத்தை சேர்ந்தவர் சிவராஜன் 58. பெரும்பள்ளம் பகுதியில் காட்டேஜ் நடத்தி வந்தார். போதைக்கு அடிமையான இவர் மதுரை அழகர் கோயில் அருகே உள்ள போதை மீட்பு மையத்தில் சிகிச்சையில் இருந்த போது அங்கிருந்தவர்களுடன் நட்பு ஏற்படுத்தி கொண்டார். இதைத்தொடர்ந்து மணிகண்டன் 28, உட்பட சிலர் கொடைக்கானல் வந்து சிவராஜன் காட்டேஜில் தங்கி சமையல் வேலை செய்துள்ளனர். சம்பளம் சம்மந்தமாக இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதில் சிவராஜன் தாக்கப்பட்டு இறந்தார். போலீசார் விசராணையில் மதுரை தத்தனேரியை சேர்ந்த மணிகண்டன் , சிவராஜனை கொலை செய்து உடலை காட்டேஜ் அருகே எரித்தது தெரியவந்தது. பாதி எரிந்த நிலையிலிருந்த சிவராஜன் உடல் மீட்கப்பட்டது. மணிகண்டனை கைது செய்த போலீசார் இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.