sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தந்தையிடம் மன்னிப்பு கேட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை

/

தந்தையிடம் மன்னிப்பு கேட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தந்தையிடம் மன்னிப்பு கேட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை

தந்தையிடம் மன்னிப்பு கேட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை


ADDED : ஆக 24, 2025 03:42 AM

Google News

ADDED : ஆக 24, 2025 03:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தந்தையிடம் அலைபேசியில் பேசி மன்னிப்பு கேட்டுவிட்டு ரயில் முன்பு பாய்ந்து பேக்கரி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை ஜெய்ஹிந்துபுரம் புலிப்பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ராஜபாண்டி.

இவரது மகன் கோபி சென்ட்ராயன் 23. திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பேக்கரி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்தார். நேற்றுமுன்தினம் இரவு நண்பரான அய்யம்பிள்ளை உடன் டூவீலரில் சென்றவர் சிறுநாயக்கன்பட்டி ரெயில்வே கேட் அருகே வந்தபோது டூவீலரை நிறுத்த கூறினார்.

அப்போது அலைபேசியில் தந்தையை தொடர்புகொண்டகோபி சென்ட்ராயன் 'தன்னை மன்னித்துவிடும் படி' தொடர்ந்து கூறி கொண்டே இருந்தார்.

அதிர்ச்சியடைந்த ராஜபாண்டி மகனை சமாதானப்படுத்த முயன்றார். அப்போது அலைபேசியை அய்யம்பிள்ளையிடம் கொடுத்துவிட்டு தனியே ரயில் தண்டவாளத்தை நோக்கி சென்றார். அந்த வழியாக மதுரை சென்ற ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தார். திண்டுக்கல் ரெயில்வே இன்ஸ்பெக்டர் துாயமணி வெள்ளைச்சாமி, எஸ்.ஐ., கேசவன் தலைமையிலான போலீசார் விசாரித்தனர்.

போலீசார் கூறுகையில்,'' கோபி சென்றாயன் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மனமுடைந்த கோபி சென்ட்ராயன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததாக'' தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us