ADDED : ஜூன் 16, 2025 02:04 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்,: திண்டுக்கல் ஏ.என்.டி., கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் இதயம், கண், செவி திறன் பரிசோதனை, பொது மருத்துவம், மருத்துவ ஆலோசனை முகாம் என்.ஜி.ஓ., காலனியில் பீட்டர் பள்ளியில் நடந்தது.
அறக்கட்டளை தலைவர் ஜெயராஜசேகர் தலைமை வகித்தார். இதில் மதுரை பாண்டியன் மருத்தவமனை சார்பில் இ.சி.ஜி., எக்கோ, திண்டுக்கல் வாசன் கண் மருத்துவமனை சார்பில் கண் பரிசோதனை, விருதுநகர் இன்னிசை சார்பில் இலவச செவி திறன் பரிசோதனை, மருத்துவ ஆலோசனைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
