/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காந்திகிராம பல்கலையில் புதிய மையங்கள்
/
காந்திகிராம பல்கலையில் புதிய மையங்கள்
ADDED : செப் 29, 2024 04:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி,: காந்திகிராம பல்கலையில் 5 புதிய மையங்கள் துவக்க விழா துணைவேந்தர் பஞ்சநதம் தலைமையில் நடந்தது. பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். ஹரியானா அறிவியல் தொழில்நுட்ப பல்கலை முன்னாள் துணைவேந்தர் ராஜேந்திர குமார் அனாயத் துவக்கி வைத்து புதிய மையங்களுக்கான இயக்குனர்களுக்கு உத்தரவுகளை வழங்கினார்.
கூட்டுறவுத்துறை சி.எஸ்.ஆர்., மையத்திற்கு பேராசிரியர் பிச்சை, பழங்குடி மொழிகள் பண்பாடு பொது படிம உருவாக்க மையங்களுக்கு பேராசிரியர் முத்தையா, மொழிபெயர்ப்பு ஆய்வு மைய இயக்குனராக பாஸ்கரன், நுண்கலைத்துறை இயக்குனராக கேசவ ராஜராஜன் நியமிக்கப்பட்டனர்.
பேராசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.