/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அடிப்படை வசதி இல்லை...நாய்கள் தொல்லை.. குமுறும் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்
/
அடிப்படை வசதி இல்லை...நாய்கள் தொல்லை.. குமுறும் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்
அடிப்படை வசதி இல்லை...நாய்கள் தொல்லை.. குமுறும் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்
அடிப்படை வசதி இல்லை...நாய்கள் தொல்லை.. குமுறும் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர்
ADDED : டிச 11, 2024 04:57 AM

திண்டுக்கல் : முறையற்ற ரோடுகள், கழிவுநீர் கால்வாய்கள் இல்லை, நாய்கள், மாடுகள், கொசுக்கள் தொல்லை, தேங்கி நிற்கும் நீரால் நோய்தொற்று அபாயம் என பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர் திண்டுக்கல் பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர் நகர் மக்கள்.
திண்டுக்கல் -தாடிக்கொம்பு ரோட்டில் உள்ளது பண்ணை குறிஞ்சி நகர் குடியிருப்போர் நலச்சங்கம். சங்கத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன்,செயற்குழு உறுப்பினர் இளஞ்செழியன், பொறுப்பாளர்கள் மணிகண்டன், அருணாச்சலம், ராமலிங்கம் உள்ளிட்டோர் கூறியதாவது: வளர்ந்து வரும் பகுதிகளாக பண்ணை குறிஞ்சி நகர் சுற்றுவட்டார பகுதிகள் உள்ளன. ஆனால் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குடியிருப்பு பகுதிகளுக்கு வருவதற்கான ரோடு மிகவும் சேதமடைந்திருக்கிறது. குடியிருப்பகுதியைச் சுற்றி எந்த இடத்திலும் கழிவு நீர் கால்வாய்கள் இல்லை. இதனால் சாக்கடை இல்லாததால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி விடுகிறது. பல நேரங்கிளில் சொந்த செலவில் அகற்ற வேண்டியதாய் உள்ளது. மழை பெய்தால் காலி மனைகள் உள்பட அனைத்து இடங்களிலும் நீர் குளம் போல் தேங்கி விடுகிறது. நீர் செல்ல வழியில்லை. அதுவாக வடிந்தால் தான் உண்டு. நீர் செல்ல வடிகால்கள் இல்லாதது பெரும் பிரச்னையாக உள்ளது. காலி மனைகளில் தேங்கும் நீரால் கொசு உற்பத்தியாகி நோய்தொற்று ஏற்படும் சூழல் நிலவுகிறது. தற்போது எங்கள் பகுதியில் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகியுள்ளதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே காய்ச்சல் தொற்றியுள்ளது. தெரு விளக்குகள் இல்லாததால் குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். விஷப் பூச்சிகள், பாம்புகள் வருவது தெரியவதில்லை. இதனால் மாலை நேரங்களுக்கு மேல் வெளியே வர தயங்க வேண்டியதாக உள்ளது. குப்பைத் தொட்டிகள் எங்குமே இல்லை. குப்பைகளை வந்து எவரும் அள்ளுவதில்லை. மாநகராட்சி மற்றும் குறும்பட்டி ஊராட்சி என இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் இந்த குடியிருப்பு நகர் இருந்தாலும் எவருமே கண்டுகொள்வதே இல்லை. எத்தனை முறையிட்டும் பயனில்லை. கிராம சபை கூட்டங்களிலும் வலியுறுத்தியுள்ளோம். ஒருவர் கூட இப்பகுதியை கண்டு கொள்தில்லை. தனித்தீவில் வசிப்பது போல் இருக்கிறது. வரிகள் உள்பட அனைத்தையும் வாங்கிக் கொள்கின்றனர். ஆனால், அடிப்படை வசதிகள் ஏதும் செய்து கொடுப்பதில்லை. அதோடு தெரு நாய்கள் மற்றும் மாடுகள் அதிகமிருக்கிறது.
நாளுக்கு நாள் எண்ணிக்கை அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. அதேபோல் கொசுத்தொல்லை மிகவும் அதிகமாக இருக்கிறது. குழந்தைகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். குடிநீர் குழாய்கள் இல்லை. பொதுக்குழாய் என்ற பேச்சிற்கே இடமில்லை. எல்லாம் சொந்தமாக ஏற்படுத்தினால் மட்டுமே உண்டு. பலமுறை பலரிடம் முறையிட்டும் பயனில்லை என்றனர்.