sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

கிராமப்புறங்களில் மினி பஸ்கள் இயக்கத்திற்கு ஆர்வமில்லை; ஷேர் ஆட்டோ, டூவீலர் அதிகரிப்பால் அச்சம்

/

கிராமப்புறங்களில் மினி பஸ்கள் இயக்கத்திற்கு ஆர்வமில்லை; ஷேர் ஆட்டோ, டூவீலர் அதிகரிப்பால் அச்சம்

கிராமப்புறங்களில் மினி பஸ்கள் இயக்கத்திற்கு ஆர்வமில்லை; ஷேர் ஆட்டோ, டூவீலர் அதிகரிப்பால் அச்சம்

கிராமப்புறங்களில் மினி பஸ்கள் இயக்கத்திற்கு ஆர்வமில்லை; ஷேர் ஆட்டோ, டூவீலர் அதிகரிப்பால் அச்சம்


UPDATED : ஏப் 09, 2025 06:36 AM

ADDED : ஏப் 09, 2025 04:04 AM

Google News

UPDATED : ஏப் 09, 2025 06:36 AM ADDED : ஏப் 09, 2025 04:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகம் முழுவதும் புதிய வழித்தடங்களில் மினி பஸ்கள் இயக்கும் வகையில் புதிய திட்டத்தை அரசு அறிவித்தது. திண்டுக்கல் வட்டாரத்தில் 33, பழநி 12 என 45 வழித்தடங்களுக்கு விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது.

கடைசி தேதி பிப். 24 ஆக இருந்தது. மினி பஸ்கள் இயக்க போதுமான வரவேற்பு இல்லாததால் கடைசி தேதி மார்ச் வரை நீட்டிக்கப்பட்டது. இருந்தபோதும் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழித்தடங்களில் மினி பஸ்களை இயக்க யாரும் ஆர்வம் காட்டவில்லை.

இதற்கு காரணம் பஸ்வசதி இல்லாத கிராமங்கள் குறித்து கணக்கெடுத்தபோது மக்களின் கருத்துக்களை அறியவில்லை. கிராமப்புறங்களில் பஸ்கள் சென்றடையாத கிராமமக்கள் உள்ள பகுதிகளை முழுமையாக கண்டறியவில்லை. பல வழித்தடங்களில் பெரும்பான்மையான துாரங்களில் ஏற்கனவே பஸ்கள் இயக்கப்படுவதும் ஒரு காரணம். ஷேர் ஆட்டோ ஆதிக்கம் அதிகமாகிவிட்டதால் மினி பஸ் இயக்கினால் நஷ்டம் தான் அடைய வேண்டும் என பல காரணங்களை தெரிவிக்கின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் அறிவித்த வழித்தடத்தில் புதிதாக மினி பஸ்கள் இயக்க விண்ணப்பிப்பதில் ஆர்வம் காட்டவில்லை.






      Dinamalar
      Follow us