sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

தனியார் இடத்தில் குடிநீர் பணிக்கு எதிர்ப்பு

/

தனியார் இடத்தில் குடிநீர் பணிக்கு எதிர்ப்பு

தனியார் இடத்தில் குடிநீர் பணிக்கு எதிர்ப்பு

தனியார் இடத்தில் குடிநீர் பணிக்கு எதிர்ப்பு


ADDED : நவ 25, 2024 04:45 AM

Google News

ADDED : நவ 25, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை : குருந்தம்பட்டியை சேர்ந்த காங்.,பிரமுகர் குமரசண்முகவேல். 30 ஆண்டுகளுக்கு முன் புத்துார் ஊராட்சி தலைவராக இருந்தபோது துணை சுகாதார நிலையத்திற்கு தனது சொந்த நிலத்தை தானம் தந்து, வழிநடைக்கு அடுத்து இருக்கும் அரசு நிலத்தை பயன்படுத்த கூறினார்.

அதே கால கட்டத்தில் மற்றொருவரின் நிலத்தில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி கட்டி குமரசண்முகவேல்,நிலம் வழியே குழாய் பாதை அமைக்கப்பட்டது. ஆனால் அரசு நிர்வாகத்தினர் அரசு புறம்போக்கு நில ஆக்கிரமிப்புகளை அகற்றி, வழி ஏற்படுத்தாமல் தனியார் இடத்தையே தொடர்ந்து பயன்படுத்துகின்றனர். மேல்நிலைத் தொட்டிக்கான குழாய் பாதையை மறுசீரமைப்பு பணி செய்ய வேண்டிய நிலை ஏற்பட நேற்று காலை ஊராட்சி நிர்வாகத்தினர் மண் அள்ளும் இயந்திரத்துடன் அங்கு சென்றனர்.

ஆனால் நில உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்ததால் போலீசாரிடம் புகார் தரப்பட்டது. இன்ஸ்பெக்டர் கண்ணன் நில உரிமையாளருடன் பேசி சமரசம் செய்ய பணி நடந்தது.

ஊராட்சி தலைவர் மஞ்சுளாதேவி கணேசன் (தி.மு.க.,) கூறுகையில்,குருந்தம்பட்டி காவிரி குடிநீர் திட்டத்திற்கு புதிய தொட்டி அனுமதி கிடைத்து உயரமான பகுதியில் இருக்கும் அரசு இடத்தில் கட்டப்பட உள்ளது.

அப்பணி முடிந்ததும் தனியார் இடத்தில் இருக்கும் பழைய தொட்டி அகற்றப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us