/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.36 கோடி
/
பழநி கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.36 கோடி
ADDED : ஜூன் 11, 2025 03:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி:பழநி முருகன் கோயிலில் பக்தர்களின் உண்டியல் காணிக்கையாக ரூ.2.36 கோடி கிடைத்தது.
நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடந்தது. ரூ. 2 கோடியே 36 லட்சத்து 5 ஆயிரத்து 903 ரொக்கம், 500 வெளிநாட்டு கரன்சி, 355 கிராம் தங்கம், 5.961 கிலோ வெள்ளி கிடைத்தது.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையை சேர்ந்த ஸ்ரீ ஓம் சிவ சேவை குழு தொண்டர்கள், கல்லுாரி மாணவர்கள், கோயில் அலுவலர்கள், வங்கிப் பணியாளர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.