/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஊராட்சி மக்கள்
/
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஊராட்சி மக்கள்
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஊராட்சி மக்கள்
மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் குவிந்த ஊராட்சி மக்கள்
ADDED : ஜன 28, 2025 05:50 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் 500க்கு மேற்பட்டோர் பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகராட்சியின் எல்லையை விரிவுபடுத்தும் வகையில் செட்டிநாயக்கன்பட்டி, பள்ளப்பட்டி, குரும்பபட்டி, பாலகிருஷ்ணாபுரம், சீலப்பாடி, அடியனுாத்து, தோட்டனுாத்து முள்ளிப்பாடி என 8 ஊராட்சிகளை இணைத்து அரசாணை வெளியிட்டுள்ளது.
ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு கிடைக்காது, கலைஞர் வீடு கட்டும் திட்டம் கிடைக்காது. வீட்டு வரி, குழாய் வரி, பாதாள சாக்கடை வரி உயர்வதோடு வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் 8 ஊராட்சிகளை சேர்ந்த பெண்கள் உட்பட 500க்கு மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.
அங்கு பெருந்திரள் முறையீடு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலர் சரத்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலர் பிரபாகரன் முன்னிலை வகித்தார்.

