ADDED : மார் 15, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி முருகன் கோயிலில் பங்குனி மாத பிறப்பு முன்னிட்டு ஆனந்த விநாயகருக்கு கும்ப கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடந்தது.
ஆனந்த விநாயகருக்கு கலச நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு வெள்ளிக் கவச அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பங்குனி உத்திர திருவிழா நடப்பதை முன்னிட்டு பக்தர்கள் கொடுமுடியிலிருந்து தீர்த்தம் காவடி எடுத்து வர துவங்கியுள்ளனர்.
பழநி முருகன் கோயில், திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில், லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு பூஜை நடந்தது.

