sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பஸ் ஸ்டாப்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை கவனியுங்க: தினமும் முகம் சுளிக்கும் பயணிகள்

/

பஸ் ஸ்டாப்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை கவனியுங்க: தினமும் முகம் சுளிக்கும் பயணிகள்

பஸ் ஸ்டாப்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை கவனியுங்க: தினமும் முகம் சுளிக்கும் பயணிகள்

பஸ் ஸ்டாப்களில் ஒட்டப்படும் போஸ்டர்களை கவனியுங்க: தினமும் முகம் சுளிக்கும் பயணிகள்


ADDED : மார் 24, 2025 05:34 AM

Google News

ADDED : மார் 24, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாண்டிக்குடி: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பஸ் ஸ்டாப்களில் ஒட்டப்படும் போஸ்டர்களால் பயணிகள் முகம் சுளிக்கின்றனர்.

மாவட்டத்தில் ஏராளமான பஸ் ஸ்டாப்கள் உள்ள நிலையில் இவற்றை உள்ளாட்சி அமைப்புகள் முறையாக பராமரிப்பது இல்லை. இதற்கிடையே பஸ் ஸ்டாப்களில் அரசியல், விழா வைபவங்கள், இரங்கல்,வேலைவாய்ப்பு, முகாம்கள் சம்பந்தமான ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன.

இவ்வாறான போஸ்டர்கள் ஒன்றின் மீது ஒன்று ஒட்டப்படுவதால் அலங்கோலமாக குப்பை, குவியலாக காட்சியளிக்கிறது. இதன் மீது ஒருமையில் எழுதுவது, சித்திரங்கள் வரைவது என மேலும் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.

துவக்கத்தில் இது போன்ற போஸ்டர் கலாச்சாரத்திற்கு உள்ளாட்சி அமைப்புகள் தடை விதித்திருந்த நிலையில் தற்போது இது குறித்து நிர்வாக ரீதியாக நடவடிக்கை இல்லை.

ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி என அனைத்து பகுதிகளிலும் இந்நிலையை காண முடிகிறது.

பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் இத்தகைய போஸ்டர் கலாச்சாரத்தால் முகம் சுளிக்கின்றனர். சுற்றுலாத்தலமான கொடைக்கானல், ஆன்மிக தலமான பழநி உள்ளிட்ட பகுதிகளில் இதன் செயல்பாடுகள் அதிகரித்துள்ளது. மாவட்ட நிர்வாகம் பஸ் ஸ்டாப்புகளில் போஸ்டர் ஓட்டும் கலாச்சாரத்தை தடை செய்து, அதற்கு மாற்றாக இயற்கை ஓவியங்கள் அந்தந்த பகுதி சார்ந்த அரிய காட்சிகளை ஓவியமாக இடம்பெற செய்யும் நிலையில் இத்தகைய செயல்பாடுகள் தவிர்க்கப்படும்.






      Dinamalar
      Follow us