sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

சேதமான ஜன்னல்களால் அச்சமடையும் மக்கள்...

/

சேதமான ஜன்னல்களால் அச்சமடையும் மக்கள்...

சேதமான ஜன்னல்களால் அச்சமடையும் மக்கள்...

சேதமான ஜன்னல்களால் அச்சமடையும் மக்கள்...


ADDED : பிப் 09, 2024 05:03 AM

Google News

ADDED : பிப் 09, 2024 05:03 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செயல்படாத சிக்னலால் அச்சம்

ஒட்டன்சத்திரத்தில் பழநி தாராபுரம் ரோடு சந்திப்பில் உள்ள சிக்னல் பல நாட்களாக செயல்படாமல் உள்ளது. இதனால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. சிக்னலை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். -வேல்முருகன் ஒட்டன்சத்திரம்.------

கழிவுநீரால் அவதி

வடமதுரை இ.பி.காலனியிலிருந்து முல்லாம்பட்டி பகுதிக்கு செல்லும் ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்ட வடிகால் கட்டமைப்பில் கழிவு நீர் தேங்குகிறது. இதனால் சுகாதாரக்கேடாக உள்ளது. கழிவு நீர் தடையின்றி வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும். கஸ்துாரி, வடமதுரை.---

பாலத்தில் ஏற்பட்ட துளை

கோபால்பட்டி நத்தம்- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கன்னியாபுரம் சந்தானவர்த்தினி ஆற்றுப்பாலத்தில் சிறுவர்கள் உள்ளே விழும் அளவிற்கு துளை உள்ளது. இதை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாண்டியன், கே.அய்யாபட்டி.-------

போஸ்டர்களால் தவிப்பு

திண்டுக்கல் பொன்மாந்துறை ஊர் பெயர் பலகையை போஸ்டர்கள் ஒட்டி அளித்துள்ளனர். இதனால் வெளியூரிலிருந்து வருபவர்களுக்கு ஊர் பெயர் தெரியாமல் சுத்தி செல்கின்றனர். பெயர் பலகையில் போஸ்டர் ஒட்டுவதை தடுக்க வேண்டும். அருண்,திண்டுக்கல்.---------

சேதமான ஜன்னல்களால் ஆபத்து

திண்டுக்கல் கலெக்டர் அலுவலக கட்டடத்தில் ஜன்னல் பகுதி சில இடங்களில் சேதமடைந்துள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகத்துக்கு வருவோர் அச்சத்துடன் செல்கின்றனர். ஜன்னல் பகுதியை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். ஜெயக்குமார்,திண்டுக்கல்.---------

சாக்கடையால் சுகாதாரக்கேடு

சிவகிரிப்பட்டி ஊராட்சி 8 வது வார்டு ஓ.பி.சி.சர்ச் ரோட்டில் சாக்கடை கால்வாய் கான்கிரீட் போட்டு அடைத்துள்ளனர். 2 மாதங்களாக சாக்கடை நீர் அங்கேயே தேங்கி சுகாதாரக்கேடாக உள்ளது. சாக்கடை அடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவபாலாஜி, சிவகிரி பட்டி.-----------

குப்பையால் உருவாகும் சீர்கேடு

திண்டுக்கல் கூட்டுறவு நகரில் குப்பையை கொட்டி பல நாட்களாக அப்படியே கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இதனால் குப்பைகள் ரோடெல்லாம் சிதறி கிடைக்கிறது. குப்பையைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். சுரேஷ்குமார் கூட்டுறவுநகர்.

---------






      Dinamalar
      Follow us