sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' சிறுவர் பூங்காவில் கோளரங்கம்

/

'கொடை' சிறுவர் பூங்காவில் கோளரங்கம்

'கொடை' சிறுவர் பூங்காவில் கோளரங்கம்

'கொடை' சிறுவர் பூங்காவில் கோளரங்கம்


ADDED : மார் 17, 2025 06:35 AM

Google News

ADDED : மார் 17, 2025 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள சிறுவர் பூங்காவில் மரத்தை அகற்றாமல் கோளரங்கம் அமைக்கும் பணி நடக்கிறது. சர்வதேச சுற்றுலாத்தலமாக உள்ள கொடைக்கானலுக்கு பொழுதுபோக்கு அம்சங்களை விரிவுப்படுத்தும் நோக்கில் நகராட்சியில் ரூ.2.48 கோடி மதிப்பில் சிறுவர் பூங்காவை மறு சீரமைப்பு செய்து கோளரங்கம் அமைக்கும் பணி நடக்கிறது. முதற்கட்ட கட்டுமான பணிகள் நடக்கும் நிலையில் சிறுவர் பூங்கா வளாகச் சுவரை ஒட்டி ராட்சத குங்கிலியம் மரங்கள் உள்ளன.

இவ்விரு மரங்களும் அதிக உயரம் உள்ளதாகவும், வேர்ப்பிடிப்பு , உறுதித் தன்மையற்ற நிலையில் விபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இம்மரத்தை அகற்றி பிளானடோரியம் அமைக்கப்பட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் நகராட்சி அதிகாரிகள் செவி சாய்க்காமல் மரங்களை அகற்றாமல் கோளரங்கம் அமைக்கும் பணியை செய்கின்றனர். பொழுதுபோக்கு அம்சங்களுடன் வடிவமைப்பு பெறும் இத்திட்டத்திற்கு இம்மரங்கள் இடையூறையும், விபத்தையும் ஏற்படுத்தும் என்பது அச்சமாக உள்ளது. பணிகள் துவங்கிய நிலையில் மரத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து வருகை தரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இம்மரங்களை அகற்ற வேண்டும்.






      Dinamalar
      Follow us