sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

போலீஸ் செய்திகள்..

/

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..

போலீஸ் செய்திகள்..


ADDED : ஜன 06, 2024 06:22 AM

Google News

ADDED : ஜன 06, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து

வடமதுரை: கொடைக்கானல் பள்ளங்கி பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சரவணக்குமார் 28. உரிமையாளர் தமிழ்மணி 27.இருவரும் உருளை கிழங்கு மூடைகளுடன் சரக்கு வேனில் திருச்சி சென்றனர்.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு வடமதுரை நாடுகண்டனுார் பிரிவு அருகில் சென்றபோது வேன் கவிழ்ந்தது. இருவரும் காயம் அடைந்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

காட்டுப்பன்றி தாக்கி மாணவி காயம்

கொடைக்கானல்: கொடைக்கானல் கூக்காலை சேர்ந்தவர் பிராணந்திகா 19. அட்டுவம்பட்டி அரசு மகளிர் கல்லூரியில் படித்து வருகிறார். நேற்று காலை வில்பட்டி பிரிவிலிருந்து கல்லூரிக்கு நடந்து சென்ற போது அவ்வழியே வந்த காட்டுப்பன்றி தாக்கியதில் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கொடைக்கானல் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.

வாகனம் மோதி தொழிலாளி பலி

நத்தம்: -காமராஜர் நகரை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி காட்டுராஜா 60. டிச.30 ல் உலுப்பகுடி பஸ் நிறுத்தம் பகுதியில் நடந்து சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. நத்தம் அரசு மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவர் நேற்று இறந்தார். நத்தம் எஸ்.ஐ., விஜயபாண்டியன் விசாரிக்கிறார்.

நிதி நிறுவன நிர்வாகி மீது 'போக்சோ'

வடமதுரை: அய்யலுார் கொன்னையம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் சின்னையா 32. திருமணமாகி குழந்தைகள் உள்ளன. செங்குறிச்சியை சேர்ந்த ஒரு பெண் கணவர் இறந்த நிலையில் கொன்னையம்பட்டியில் தங்கி இருந்தார். இவரது மகள் அருகில் உள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் சின்னையா மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து வந்தார். வடமதுரை போலீசார் வழக்குப்பதிந்து சின்னையா மீது போக்சோவில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.

தற்கொலை

திண்டுக்கல்: கொட்டபட்டி சிவில் சப்ளை காலனியை சேர்ந்த கூலித்தொழிலாளி பட்டுமணிகுரு23. இவரது மனைவி கவிதா20. இவர்களுக்கு 3 மாதத்திற்கு முன் திருமணம் நடந்தது. பட்டுமணிகுரு மது பழக்கத்திற்கு அடிமையாகி வேலைக்குச் செல்லாமல் இருந்தார். மனைவி கவிதா கணவரை கண்டித்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

நெஞ்சுவலியால் துடித்தவர் மீட்பு

திண்டுக்கல்: நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர் நட்ராஜ் 61. நாகர்கோவில் டூ மும்பை எக்பிரஸ் ரயிலில் பயணித்தார். திண்டுக்கல் அருகே வந்தபோது, நெஞ்சு வலியால் அவதிப்பட்டார். அங்கிருந்த போலீசார் திண்டுக்கல் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மதியம் 12:00 மணிக்கு திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷன் வந்த போது போலீசார் நட்ராஜை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us