ADDED : மார் 17, 2025 06:19 AM
திண்டுக்கல் : தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி ,மேம்பாட்டுக் கழகம்(தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர், பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு மருத்துவம் தொழில் சார்ந்த ஆங்கில தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இப்பயிற்சிக்கு பி.எஸ்.சி, எம்.எஸ்.சி நர்சிங் பட்டப்படிப்பு, போஸ்ட்பேசிக் பி.எஸ்.சி நர்சிங், பொது செவிலியர் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
இப்பயிற்சிக்காக கால அளவு 2 மாதமும் விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவு தொகை தாட்கோவால் அளிக்கப்படும்.
பயிற்சி முடித்தவுடன், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலமாக அயல்நாடுகளில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் www.tahdco.com என்ற தாட்கோ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.