sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

'கொடை' யில் 'ஜீப்'பை அகற்றாமல் ரோடு அமைத்த அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அதிருப்தி

/

'கொடை' யில் 'ஜீப்'பை அகற்றாமல் ரோடு அமைத்த அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அதிருப்தி

'கொடை' யில் 'ஜீப்'பை அகற்றாமல் ரோடு அமைத்த அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அதிருப்தி

'கொடை' யில் 'ஜீப்'பை அகற்றாமல் ரோடு அமைத்த அவலம் கண்டுகொள்ளாத அதிகாரிகளால் பொதுமக்கள் அதிருப்தி


ADDED : ஆக 14, 2025 02:48 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல்: கொடைக்கானலில் புதியதாக ரோடு அமைத்தபோது காலாவதியான ஜீப் நிற்கும் பகுதியை தவிர்த்து ரோடு அமைத்த அவலம் அரங்கேறியுள்ளது.

கொடைக்கானல் நகராட்சியில் சேதமடைந்த ரோடுகள் தற்போது புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

சில தினங்களுக்கு முன் செவன் ரோடு கவி தியாகராஜர் ரோடு வரை ரோடு அமைக்கும் பணி நடந்தது. இதில் அரசு மருத்துவமனை முன்பு காலாவதியான ஜீப் நிறுத்தப்பட்ட நிலையில் வாகனத்தை அகற்றாமல் அந்த இடைத்தை விட்டு ரோடு அமைக்கப் பட்டுள்ளது.

இந்த ரோட்டில் ஆவின் பாலகம்,நுாலகம், போலீஸ் தங்கும் விடுதி, வார சந்தை உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்படுகின்றன.ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் அடிகுழாய், வாகனங்களை அகற்றாமல் ரோடு அமைத்தது குறித்து சர்ச்சை பற்றி சமூக வலைதளத்தில் பேசும் பொருளானது.

இதையடுத்து ரோடு அமைக்கும் பணியின் போது காலாவதியாக நிற்கும் வாகனங்கள், செயல்பாடாற்ற பொருட்களை அகற்றிய பின் ரோடு பணிகளை துவங்க வேண்டும் என உத்தரவிடப் பட்டது.

தற்போது கொடைக்கானலில் காலாவதியான ஜீப்பை அகற்றாமல் கான்ட்ராக்டர் ரோடு அமைத்தது குறித்து பொதுமக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.






      Dinamalar
      Follow us