sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: மறியல்

/

பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: மறியல்

பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: மறியல்

பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம்: மறியல்


ADDED : ஜன 04, 2025 04:24 AM

Google News

ADDED : ஜன 04, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: பழநி கொடைக்கானல் சாலை சந்திப்பு அருகே உள்ள கிரிவீதி சிவகிரிபட்டி பைபாஸ் இணைப்பு சாலை ஆக்கிரமிப்பை போலீசார் ,நெடுஞ்சாலை துறையினர் அகற்றியதால் கடைக்காரர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பழநி கிரிவீதி ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி தனியார் வாகன போக்குவரத்துக்கு தடை விதித்து நீதிமன்றம் உத்தர விட்டது. அதன்படி நீதிமன்ற வழிகாட்டுதல்கள் கடைப்பிடிக்கப்பட்டன.

இந்நிலையில் கிரிவீதி பகுதி கடை வியாபாரிகளுக்கு மாற்று இடம் அறிவிக்காத நிலையில் இடும்பன் இட்டேரி ரோடு, குறவன் பாறைரோடு, கொடைக்கானல் ரோடு சந்திப்பிலிருந்து கிரி வீதி செல்லும் சாலையில் கடை அமைத்திருந்தனர்.

கொடைக்கானல் ரோடு சந்திப்பிலிருந்து கிரிவீதி செல்லும் சாலை பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் அப்பகுதியில் போலீசார் ,நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டு கடைகளை அப்புறப்படுத்தினர்.

இதனால் பாதிப்படைந்த கடைக்காரர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us