ADDED : பிப் 22, 2024 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ராஜக்காப்பட்டியை சேர்ந்த கணேச பெருமாள் திண்டுக்கல் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் ,பாலன் நகர் 3வது தெருவின் பொதுப்பாதையில் தனி நபர் ஆக்கிரமிப்பு உள்ளது.
அதை அகற்ற குறிப்பிட்டிருந்தார். ஊராட்சி தலைவர் லதா தர்மராஜ் தலைமையில் பி.டி.ஓ., சுப்பிரமணி, மண்டல துணை பி.டி.ஓ., தாமோதரன், வி.ஏ.ஓ., பாலமுருகன், தாடிக்கொம்பு எஸ்.ஐ.,க்கள் பிரபாகரன், பாக்கியசாமி, ஊராட்சி செயலாளர் மாரிமுத்து குழுவினர் ,பாலன் நகர் 3வது தெரு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.