sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நீரோடை தடுப்புகள் அகற்றம்

/

நீரோடை தடுப்புகள் அகற்றம்

நீரோடை தடுப்புகள் அகற்றம்

நீரோடை தடுப்புகள் அகற்றம்


ADDED : நவ 21, 2024 05:00 AM

Google News

ADDED : நவ 21, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைரோடு: கொடைரோடு அருகே வறண்ட கண்மாய்க்கு தண்ணீர் நிரப்புவதற்காக நீரோடையை மறித்து விவசாயிகள் ஏற்படுத்திய தடுப்புகள் தாசில்தார் தலைமையில் அகற்றப்பட்டது.

கொடைரோடு அன்னசமுத்திரம் கண்மாய்க்கு தண்ணீர் வரத்து நின்றதால் வறண்டது. சுற்றுப் பகுதி நிலத்தடி நீர்மட்டமும் குறைந்தது. குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்ட மக்கள்,விவசாயிகள் கருக்காச்சி ஓடையில் தடுப்பு ஏற்படுத்தி அதன் தண்ணீரை அன்னசமுத்திர கண்மாய்க்கு திருப்பினர்.

இதனிடையே நீதிமன்ற உத்தரவின்படி கருக்காச்சி ஓடை தடுப்பை அகற்ற நிலக்கோட்டை தாசில்தார் விஜயலட்சுமி தலைமையில் பொதுப்பணித்துறையினர், அம்மைநாயக்கனுார் போலீசாரோடு வந்தனர். கொடைரோடு பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் சிலர் விஷ பாட்டில்களுடன் தண்ணீர் வரவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வோம் எனக்கூற போலீசார் விஷ பாட்டில்களை பறித்தனர். அம்மையநாயக்கனுார் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், கவுன்சிலர் விஜயகுமார் நிலக்கோட்டை தாசில்தாருடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு பொதுப்பணித்துறையினர் கருக்காச்சி ஓடை தடுப்பை அகற்றினர்.






      Dinamalar
      Follow us