/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஞாயிறு தோறும் மாயமாகும் ரோட்டோர மரங்கள்
/
ஞாயிறு தோறும் மாயமாகும் ரோட்டோர மரங்கள்
ADDED : ஜூன் 24, 2025 03:13 AM
வடமதுரை: வடமதுரை பகுதியில் ரோட்டோரங்களில் இருக்கும் அரசுக்கு சொந்தமான மரங்களை உரிய அனுமதி பெறாமல் ஞாயிறு தோறும் வெட்டி அகற்றும் அவல நிலை தொடர்கிறது.
மனிதன் உயிர் வாழ தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் மரங்களின் மகிமை பலருக்கு புரிவதில்லை. தங்கள் நிலத்தில் ஏதாவது இடத்தில் இருக்கும் மரங்களை விவசாயத்திற்கான வெயில் கிடைக்காமல் தடுப்பதாக வெட்டி அகற்றும் அறியாமை மக்களிடம் உள்ளது.
இந்த காரணத்தினாலே பல ஆண்டுகளுக்கு முன்னர் வரை மரங்கள் அடர்ந்திருந்த தனியார் நிலங்கள் தற்போது வெறுமனே காட்சி அளிக்கின்றன.
பல ஆண்டுகளுக்கு முன்னர் பலன், நிழல் தரும் என பல வகை மரங்கள் வளர்க்கப்பட்டன. சில வகை மரங்கள் பறவைகளின் எச்சங்களின் மூலம் விதை பரவல் முறையில் தானாக வளர்ந்தன.
இவற்றின் நிழல், கிளைகள் தங்கள் நிலத்திற்கு இடையூறாக இருப்பதாக கருதி வெட்டி அகற்றுகின்றனர்.
குறிப்பாக அரசு இடங்களில் உள்ள மரங்களை வெட்டும் வேலையை ஞாயிறு தோறும் செய்கின்றனர். உள்ளாட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை பாதுகாக்க கவனம் செலுத்த வேண்டும்.