/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்
/
பழநியில் நாளை ரோப்கார் சேவை நிறுத்தம்
ADDED : மார் 19, 2026 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: மாதாந்திர பராமரிப்பு பணிக்காக பழநி கோயில் ரோப்கார் சேவை நாளை (மார்ச் 20) நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
பழநி முருகன் கோயிலுக்கு சென்றுவர ரோப்கார், வின்ச், படிப்பாதை, யானைப்பாதையை பக்தர்கள் பயன்படுத்துகின்றனர். ரோப்கார் மூலம் 3 நிமிடத்தில் கோயிலுக்கு செல்ல முடியும். ஏராளமான பக்தர்கள் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை (மார்ச் 20) ரோப்கார் இயங்காது. பக்தர்கள் வின்ச், படிப்பாதை, யானைப்பாதையை பயன்படுத்தலாம் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

