நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் கல்வி மாவட்ட பாரத சாரண, சாரணிய சங்கத்தின் சார்பாக சாரண இயக்க நிறுவனர் பேடன் பவுலாரின் பிறந்த தினம் சிந்தனை நாள் விழாவாக நடந்தது.
அருள்ஜோதி வள்ளலார் மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்ட இதில் சாரண சாரணிய மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் வழங்கினார். சாரண இயக்க செயலர் சந்திர சேகரன் வரவேற்றார். ஏற்பாடுகளை இயக்க பொருளாளர் கங்காதாரன் செய்திருந்தார். உதவி செயலர் ஜான் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.