/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநி வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்; விவசாயிகள் கண்ணீர்
/
பழநி வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்; விவசாயிகள் கண்ணீர்
பழநி வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்; விவசாயிகள் கண்ணீர்
பழநி வையாபுரி குளத்தில் கலக்கும் கழிவுநீர்; விவசாயிகள் கண்ணீர்
ADDED : ஜன 05, 2024 04:26 AM

பழநி பழநி வையாபுரி குளத்தில் நகர் பகுதி சாக்கடை நீர் கலப்பதாலும் ,அமலை செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளதாலும் இதன் நீரை நம்பி உள்ள விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர்.
பழநி வையாபுரி குளம் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.குளத்தின் அருகே பஸ் ஸ்டாண்ட், திரு ஆவினன்குடி கோயில், காந்தி மார்க்கெட் உள்ளன. இந்த குளம் மூலம் பல நுாறு ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இங்குள்ள ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. தற்போது நகரில் சாக்கடை நீர் கலந்து குளம் மாசடைந்துள்ளது. குளத்தில் அமலைச் செடிகளும் ஆக்கிரமித்துள்ளது.
குளத்தின் கரைப்பகுதிகளில் குப்பை கொட்டப்படுவதால் கொசு தொல்லையால் நோய் தொற்று ஏற்படுகிறது. வையாபுரி குளத்தின் கரைகளை சீரமைத்து நிரந்தரமாக தண்ணீர் தேக்கிவைக்கவும், குளங்களில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரித்து விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் நல்ல தண்ணீராக மாற்றவும் விவசாயிகள் கோரி வருகின்றனர்.
நோய் தொற்றுக்கு வழி
சந்தானதுரை, தலைவர், விவசாயிகள் நலச்சங்கம்: மாசு அடைந்த குளத்து நீரால் பாசனத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது.
நன்னீராக மாற்றி விவசாயத்திற்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவுநீர் கலப்பதை தடுத்து குளத்து நீரை துாய்மையாக மாற்ற வேண்டும். அமலை செடிகளையும் அகற்ற எடுக்க வேண்டும்.
தேவை பாதுகாப்பு வேலி
கிருஷ்ணானந்தம், செயலாளர், விவசாயிகள் நலச்சங்கம்: குளம் பகுதியை முழுவதும் அளவீடு செய்து பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும். வையாபுரி குளத்து நீர் சிறுநாயக்கன்குளம், பாப்பான்குளம், புதுக்குளமங்களுக்கு செல்கிறது .இந்த நீர் கழிவுடன் செல்வதால் பல்லாயிரம் ஏக்கர் நிலம் பாதிப்படுகிறது.
நடவடிக்கை எடுங்க
சுப்பிரமணியன், விவசாயி: வையாபுரி குளம் மிகவும் புனிதமானது. குளத்திற்கு தண்ணீர் வரும் வாய்க்காலில் கழிவுகளை கலக்கின்றனர். குறிப்பாக வாய்க்கால் ஓரங்களில் ஆக்கிரமிப்பு செய்து டாய்லெட், பாத்ரூம் அமைத்துள்ளனர். தைப்பூச பக்தர்கள் வருகையை அதிகரிப்பால் கழிவு நீர் அதிக அளவில் வாய்க்காலில் கலந்து குளத்திற்கு வந்து சேருகிறது. இதனை தடுக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.