/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாலியல் வன்கொடுமை 35 ஆண்டுகள் சிறை
/
பாலியல் வன்கொடுமை 35 ஆண்டுகள் சிறை
ADDED : ஜூலை 01, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 35 ஆண்டு சிறை தண்டனை விதித்து திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திண்டுக்கல் மருதானிக்குளம் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் 23. 2023ல் 10ம் வகுப்பு சிறுமியை கடத்தி கடத்திச்சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.
திண்டுக்கல் மேற்கு போலீசார் மதியழகனை போக்சோ வழக்கில் கைதுசெய்தனர்.
இதன் வழக்கு திண்டுக்கல் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜோதி வாதாடினார்.
மதியழகனுக்கு 35 ஆண்டு சிறைத்தண்டனை, 20 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சரண் தீர்ப்பளித்தார்.