ADDED : அக் 04, 2025 04:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் உள்ளிட்ட உணவு பாதுகாப்பு துறையினர் நத்தம் அருகே கோசுகுறிச்சி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பகுதி 3 பெட்டிக்கடைகளில் சோதனை செய்த போது விற்பனைக்காக புகையிலை பொருட்கள் வைத்திருந்தது தெரிந்தது.
இதையடுத்து கடைகளில் இருந்து 1 கிலோ 700 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 3 கடைகளுக்கு அபாரதம் விதித்து சீல் வைத்தனர்